துபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி- 50, டிவில்லியர்ஸ் 39, தேவதூத் பாடிக்கல்- 22, ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தியது.