கோவில்விளையில் காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் பெண் பார்வை இழந்ததாக புகார்: போலீசார் விசாரணை

குமரி: கோவில்விளையில் காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் பெண் பார்வை இழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெஜிலா பாக்கியஜோதிக்கு (49) தனியார் மருத்துவமனை அளித்த மாத்திரை சாப்பிட்டவுடன் கண் வீங்கியதாக புகார் எழுந்துள்ளது. வீக்கம் அதிகமாகி பார்வை இழந்ததை அடுத்து ஒரு கண் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான தனியார் மருத்துவர் ரதீஷ் போலி மருத்துவர் என்றும் புகார் எழுந்துள்ளது. 

Related Stories: