கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு 1440 கனஅடி நீர்வரும் நிலையில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில் 39.96 அடி நீர் உள்ளதால் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுகிறது.