கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 1.23 கோடி பறிமுதல்: 9 கிலோ வெள்ளியும் சிக்கியது

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர்  பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த காரை மறித்து சோதனையிட்டபோது அதில் இருந்த 3 பேர் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி நகைகள் வைத்திருந்தது தெரியவந்தது. காரில் இருந்த மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அசோக் (40) என்பவர் வைத்திருந்த பையில் 6 லட்சம் ரூபாய், 9 கிலோ  வெள்ளி பொருட்கள் இருந்தன.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சீராலா பகுதியை சுப்பராவ் மகன் சதீஷ்குமார் (38) என்பவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாயும், அதே பகுதியை சேர்ந்த காதர்பாஷா மகன் ரஹ்மானிடம் 67 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 3 பேரிடம் இருந்தும் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் மற்றும் 9 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேர் மற்றும் கார் டிரைவரான ஷேக் அன்வர் (28) ஆகிய 4 பேரையும் ஆரம்பாக்கம் போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: