சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த காரை மறித்து சோதனையிட்டபோது அதில் இருந்த 3 பேர் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி நகைகள் வைத்திருந்தது தெரியவந்தது. காரில் இருந்த மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அசோக் (40) என்பவர் வைத்திருந்த பையில் 6 லட்சம் ரூபாய், 9 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன.