பொன்னேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து :சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கோழிகள் எரிந்ததாக தகவல்

திருவள்ளூர்  : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. தீவனங்கள் வைக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியதால் சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கோழிகள் எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புரட்டாசி மாதம் முடிவடைந்துள்ள நிலையில் கறிக்கோழிகள் மற்றும் முட்டை விலை உயர்ந்துள்ளது. லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த தீ விபத்தானது உரிமையாளர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: