எம்எல்ஏவுக்கு கொலைமிரட்டல் விடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை: மாணிக்கம்தாகூர் எம்பி வலியுறுத்தல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் தனக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுவதாக நேற்றுமுன்தினம் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து விருதுநகர் எம்பிமாணிக்கம்தாகூர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் தொடர்கிறது என்பதற்கு சாத்தூர் ராஜவர்மன் கூறியிருப்பது சான்றாக உள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் அதிகாரபோதை செயல்கள் மக்களுக்கு தெரியும். அவரது கட்சியை சேர்ந்த எம்எல்ஏவே தனக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் தலையிட்டு அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து, பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Related Stories: