கன்னியாகுமரி: தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுறுவுவதை தடுக்கும் வகையில், கன்னியாகுமரி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ‘சஜாக் ஆப்பரேசன்’ என்ற தீவிரதவாத தடுப்பு ஒத்திகையில் இன்று ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ‘சஜாக் ஆபரேஷன்’ எனப்படும் தீவிரவாத தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 52 கடற்கரை கிராமங்களில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதிநவீன படகு மூலம் கடலில் ரோந்து செல்கின்றனர். குறிப்பாக கூடன்குளம் அணுஉலையின் பின்புற பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.