ராமேஸ்வரம்: ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். பலத்த காற்று, வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக ஒரு வாரத்துக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில், கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் இரவு நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வாட்டர் ஸ்கூட்டரில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.