கேரள போலீசுக்கு ஜெர்மன் துப்பாக்கி

திருவனந்தபுரம்: ஜெர்மன் ஆயுத உற்பத்தியாளரான ‘ஹெக்லர் அன்ட் கோக்’கிடம் இருந்து எம்பி-5 ரக இயந்திர துப்பாக்கிகளை கேரள காவல்துறை வாங்கி உள்ளது. இவை கமாண்டோக்கள், நக்சல் எதிர்ப்பு படைகளுக்கு வழங்கப்பட உள்ளன. ஆனால், இவற்றின் விலை மற்றும் எத்தனை துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கூறப்படவில்லை. தானியங்கி முறையிலும், சாதாரண முறையிலும் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தலாம். இதை கேரளா முதல்முறையாக  வாங்கியுள்ளது.

Related Stories: