தமிழகத்தில் பாஜவை வலிமைப்படுத்திய பிறகு 234 தொகுதிகளில் போட்டியிடுவதே எங்கள் இலக்கு: தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழக பாஜவின் உயர்மட்டக்குழு கூட்டம் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, நயினார்  நாகேந்திரன் உள்பட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாஜ தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கலந்து  கொண்டு, தமிழகத்தில் பாஜவை வலுப்படுத்துவது, சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான பல்வேறு விஷயங்கள் ெதாடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டி, ‘‘ தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் பாஜவை பலம் பொருந்தியதாக மாற்றி, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதே எங்களுடைய இலக்கு” என்றார்.

Related Stories: