தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

வரும் 21ம் தேதி முதல் மண்டல வாரியாக சந்தித்து பேசுகிறார்

சென்னை: சட்டசபை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மாவட்டம் வாரியாக மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்துகிறார். வருகிற 21ம் தேதி முதல் மண்டலம் வாரியாக அவர் சந்தித்து பேசுகிறார்.  இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட  அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 21, 23, 27, 28 ஆகிய தேதிகளில் மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கட்சி ஆக்கப் பணிகள் பொருள் குறித்து விவாதிக்கப்படும்.

21ம் தேதி காலை 9 மணி மேற்கு மண்டலம்- கோவை, ஈரோடு, திருப்பூர். மாலை 4 மணி-சேலம், நாமக்கல், கரூர். 23ம் தேதி தெற்கு மண்டலம் காலை 9 மணி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர். மாலை 4 மணி- ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகர். 27ம் தேதி கிழக்கு மண்டலம் காலை 9 மணி-புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி. மாலை 4 மணி-தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திண்டுக்கல். 28ம் தேதி வடக்கு மண்டலம் காலை 9 மணி-கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை. மாலை 4 மணி-கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரத்துக்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: