சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 264 உயர்ந்தது. மீண்டும் சவரன் 39 ஆயிரத்தை தொட்டுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் முதல் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வருகிறது. இந்த மாதமும் இதேநிலைதான் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,830க்கும், சவரன் 38,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 23 அதிகரித்து ஒரு கிராம் 4,853க்கும், சவரனுக்கு 184 அதிகரித்து ஒரு சவரன் 38,824க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது.