5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வேன் ஓட்டுநருக்கு சாகும் வரை சிறை: நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நெல்லையை வேன் ஓட்டுநருக்கு சாகும் வரை சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2016-ம் ஆண்டு 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமி பள்ளிக்கு வேனில் சென்ற போது வேன் ஓட்டுநர் பெருமாள் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததன் காரணமாக அவருக்கு இயற்கையாக சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி பெருமாளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த குழந்தையின் காப்பாளர் பெயரில் 3.60 லட்சம் ரூபாய் வைப்பு தொகை வைக்கவும், நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை 32 சாட்சிகளிடம் விசாரணை நிறைவு பெற்ற பின்பாக தற்போது இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: