நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நெல்லையை வேன் ஓட்டுநருக்கு சாகும் வரை சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2016-ம் ஆண்டு 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமி பள்ளிக்கு வேனில் சென்ற போது வேன் ஓட்டுநர் பெருமாள் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததன் காரணமாக அவருக்கு இயற்கையாக சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி பெருமாளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.