திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர்-சிவகாசி செல்லும் சாலை மோசமாக உள்ளதால், சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர்-சிவகாசி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக சாலைகள் பெயர்ந்துள்ளது. குறிப்பாக திருவில்லிபுத்தூர் சாலையில் செங்குளம் விலக்கு பகுதியில் செல்லும் சாலையும், திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அருகே உள்ள சாலை, மல்லி அருகேயுள்ள சாலை என சிவகாசி சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது. கனரக வாகனங்கள் உள்பட தினமும் ஏராளமான வாகனங்கள் இருசக்கர வாகனங்களும் இந்த வழியாகதான் சிரமத்துடன் சென்று வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் நலனுக்காக இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.