ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே நடந்த பெண் கொலை வழக்கில், அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் எல்லையன் மனைவி கௌரி (42). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பன்றிகளை மேய்க்க சென்றபோது, பக்கத்து கிராமமான கன்னிகைப்பேர் மதுரவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.