கூடலூர்: தேக்கடியில் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுக்கின் நண்பர் வீடு, 135 ஆண்டுகள் ஆனாலும் தற்போது வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
முல்லை பெரியாறு அணை கட்டும் பணி கடந்த 1886ல் தொடங்கியது. அப்போது அணை கட்டுமான பணிக்காக பொறியாளர் கர்னல் பென்னிகுக், தனது நண்பரான மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான நாமுராவை தேக்கடிக்கு அழைத்து வந்தார். அவர் குடும்பத்துடன் வசிக்க குமுளி - தேக்கடி சாலையில் 6 அறைகள் கொண்ட வீட்டை பென்னிகுக் கட்டினார். இந்த வீட்டில் சுவர்கள் பெரியாறு அணை கட்ட பயன்படுத்திய சுருக்கி, சுண்ணாம்பால் கட்டப்பட்டது.