சிஐடியூ ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: உத்தரபிரதேசத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சிஐடியூ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறுமி உயிரிழப்பிற்கு நீதி வழங்க வலியுறுத்தியும், இதனை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Stories: