அண்ணா பல்கலைக்கழக விவகாரம் பதவி சுகத்துக்காக வேடிக்கை பார்க்கிறது அதிமுக அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜ அரசு துணைவேந்தர் சூரப்பா மூலம் பல்கலைக்கழகத்தை நேரடியாக மத்திய அரசின் கீழ், கொண்டு வர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லாமல் போய்விடும். மாநில கல்வி பட்டியலில் உள்ள பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்ய பார்க்கிறது. அதற்கு ஆளும் மாநில அரசு துணை போகிறது. எப்படி நம் மாணவ செல்வங்களின் மருத்துவ கனவை நீட் தேர்வின் மூலம் மத்திய பாஜ அரசு சிதைத்ததோ, அதே போல பொறியியல் கனவும் அழித்தொழிக்க முயற்சி செய்கின்றனர். இதையும் அண்ணாவின் பெயரில் உள்ள அடிமை அதிமுக அரசு பதவி சுகத்திற்காக கைகட்டி வேடிக்கை பாக்கிறது. 

Related Stories: