சாராயத்தை சாலையில் கொட்டி அழித்த மக்கள்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கடம்பங்குடி வெட்டாறு அருகே கள்ளசாராயம் விற்பனை நடைபெற்றது.  நேற்று காலை காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகள் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த 3 பைக்கை கிராமமக்கள் விரட்டினர். இதில் ஒரு பைக் மட்டும் பிடிப்பட்டது. அதில் இரண்டு சாக்கு மூட்டைகளில் 13 பாலித்தீன் பைகளில் 100 லிட்டர் சாராயம் இருந்தது. உடனடியாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள் சாராயம் கடத்தி வந்த பைக்கை எடுத்துக்கொண்டு வாலிபர் தப்பினார். கிராமமக்கள் சாராய பாக்கெட்டுகளை வெட்டாறு பாலத்தில் அடுக்கி வைத்து பின்னர் சாலையில் கொட்டி அழித்தனர்.

Related Stories: