தூத்துக்குடி: வீட்டை காலி செய்ய வைத்ததால் நள்ளிரவில் ஒர்க் ஷாப்பிற்கு வெல்டர் தீவைத்தார். இதில் மெக்கானிக் கருகி பலியானார். தூத்துக்குடி, காட்டன் ரோடு, 25 வீடு காம்பவுண்ட்டில் வசித்தவர் அண்ணாமலை (42). மாடியில் குடியிருந்து, கீழ்ப்பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். அதே காம்பவுண்டில் பக்கத்து வீட்டில் வசித்த வெல்டரான மரிய அந்தோணி தினேஷ் மெண்டிஸ் (45) என்பவர் தினமும் போதையில் தகராறு செய்து வந்தார்.
அண்ணாமலை மற்றும் அங்குள்ளவர்கள் வலியுறுத்தியதன் பேரில் அந்த வீட்டின் உரிமையாளர் தினேஷை காலி செய்ய வைத்தார். இதனால் அவர் அருகில் உள்ள தெருவில் குடியேறினார்.