லக்னோ : உத்தரபிரதேசத்தில் தூங்கி கொண்டு இருந்த 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கோண்டா பராஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாஸ்கா கிராமத்தில் கஜல் (17), மஹிமா (12), மற்றும் சோனம் (8) ஆகிய மூவரும் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிட் வீசி சென்றுள்ளனர்.
மூத்த சகோதரிக்கு முகம் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் இரண்டு சகோதரிகளுக்கு கைகளில் சிறு காயங்கள் உள்ளன.