திருவள்ளூர்: மணல் கடத்தலை தடுக்காத திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஐ.காதர்மைதீன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் நடந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். திருட்டு மணல் எடுப்பதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பொருத்த வேண்டும். தினமும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 500 லாரிகளில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.