சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நெற்குன்றம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வீரவேல் (37). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமானது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் திருமங்கலம் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, வீரவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Related Stories: