டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், உதம்சிங் நகர் மாவட்டத்தின் காஷிபூர் பகுதியை சேர்ந்தவர் ஷயரா பானு. இவரது கணவர் விரைவு தபால் மூலம் அனுப்பிய கடிதத்தில் மூன்று முறை `தலாக்’ கூறி, இவரை கடந்த 2015ல் விவாகரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முஸ்லிம்களின் தனி சட்டமான முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் இஸ்லாமிய பெண் இவர்தான். இந்த வழக்கில், முத்தலாக்கிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. மேலும், இந்த நடைமுறையை குற்றமாக அறிவித்து, நாடாளுமன்றத்திலும் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், மத்திய பாஜ அரசும் சட்டம் இயற்றியது. இந்த வழக்கால், தேசிய அளவில் ஷயரா பானு புகழ் பெற்றுள்ளார்.