சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி சிறுமி, சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்படுபவர்களை, மகளிர் நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கி வந்தது.இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி கடந்த ஆண்டு முதல் போக்சோ வழக்குகளுக்கு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. அதற்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பொதுவாக, ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அந்த காவல் நிலையத்தின் எல்லையான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள்.