சென்னை: கடலூரில் பட்டியல் இன பெண் ஊராட்சி தலைவியை இருக்கையில் அமர விடாமல் தரையில் அமர வைத்து மன்ற கூட்டம் நடத்திய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கனிமொழி எம்பி கூறினார்.திமுக எம்பி கனிமொழி நேற்று பகல் 12.30 மணி விமானத்தில் டெல்லி சென்றார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியை சீட்டில் அமரவிடாமல் தரையில் அமர வைத்து மன்ற கூட்டத்தை நடத்திய செயல், நிச்சயமாக வன்மையாக கண்டிக்கக்கூடிய ஒன்று.