அறந்தாங்கி: அறந்தாங்கியில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சேதமானது. அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் அருகே பாலாஜி என்பவருக்கு சொந்தமான அருண் ஓட்டல், சோமு என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை, சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான காபி ஷாப் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கடைக்காரர்கள் தங்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். அருண் ஓட்டல் உரிமையாளர் பாலாஜி இறுதியாக தனது கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் அருண் ஓட்டலில் பற்றிய தீ மளமளவென்று 3 கடைகளுக்கும் பரவியது. அதிகாலை 2.30 மணிக்கு இந்த கடைகளுக்கு எதிரில் உள்ள வீட்டில் குடியிருந்து வரும் அறந்தாங்கி முன்னாள் வர்த்தக சங்கத்தலைவர் ரவீந்திரக்குமார் என்பவர் தூக்கத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துள்ளார்.