துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நாராயணன் (70). இவரது மனைவி மனோன்மணி (48). இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் நாராயணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாராயணன், வீட்டின் வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து கதவை உள்பக்கமாக மூடினார். பின்னர் மனைவி தலையில் கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.