ஆனைமலை: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ- பாஸ் முறை கட்டாயம் எனவும், ஒரு நாளைக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் கோவை கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் வாகனங்களை கண்காணிக்க சுகாதாரத்துறை மூலம் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதால், தினமும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்தார். நேற்று அவர் ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: