தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியில் இருந்து வெளியேறி சுற்றித்திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து, மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையில், முதலை உலாவுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், ஓம்சக்தி கோயில் பகுதியில் 80 கிலோ எடையுள்ள முதலையை, தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிடித்தனர். இதனையடுத்து, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அந்த முதலையை ஒப்படைத்தனர்.