வாலிபரிடம் கத்திமுனையில் நகை, செல்போன் பறிப்பு

பூந்தமல்லி: சென்னை போரூர் - குன்றத்தூர் சாலை, மதனந்தபுரம் அருகே நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நபர் ஒருவர் அங்கும், இங்கும் நடந்து சென்றவாறு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த 2 வாலிபர்களில் ஒருவன் வேகமாக இறங்கி ஓடிவந்து கத்தியை  காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகை, செல்போன், பணம் ஆகியவற்றை பறித்தான். மேலும் அவன் அந்த நபரை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

மேலும் செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற போதும் அந்த வாலிபர்  பதற்றம் தெரியாத வகையில் கீழே போட்ட சிகரெட்டை மீண்டும் எடுத்து மீண்டும் புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றுவது போல் அந்த சிகரெட்டை புகைத்தபடி செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது . இது குறித்து போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர்.

Related Stories: