திருப்பூர் குமரன் வாலிபர் சங்க ஆண்டுவிழா

காஞ்சிபுரம்: திருப்பூர் குமரனின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் குமரன் வாலிபர் சங்கத்தின் 71வது ஆண்டு விழா காஞ்சிபுரத்தில் நடந்தது. சங்க தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன் கலந்துகொண்டு சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் இராம.நீராளன் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, மாதவன், குமாரசாமி, பரமசிவம், வரதராஜன், அமரேசன், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: