உடுமலை: கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் குப்பைகளை எரிப்பதால் பஸ் ஸ்டாப் சுவர் சேதமாகி வருகிறது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. வீதியெங்கும் சிதறி கிடக்கிறது. பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில், குடிநீர் தொட்டி, ரேஷன் கடை, பஸ் ஸ்டாப் உள்ளது. குப்பைகளுக்கு சிலர் தீவைத்து செல்கின்றனர். இதனால் குப்பை எரிந்து அப்பகுதியில் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.