நெல்லை: நெல்லை மாநகரில் விளைநிலங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நெல்லை டவுணில் இருந்து குறுக்குத்துறை செல்லும் வழியில் சாலையோரம் உள்ள விளைநிலங்களில் விழிப்புணர்வு இன்றி கட்டிட இடிபாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக விளைநிலங்களில் இதுபோன்ற கட்டிடக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்தால், விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும்.