புதுடெல்லி, :உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பீம் ஆர்மி அமைப்பின் சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மாலை கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் என்று எந்த மாநிலத்தில் நிகழ்ந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவின் மகள்களே.