ஆத்தூரில் சாலைமறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது

ஆத்தூர்: ராகுல்காந்தியை கைது செய்த பாஜக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால், நெடுங்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

ராகுல்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அண்ணா நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: