ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் மறியல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், நாளொன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது 500 நெல் மூட்டைகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென நெல் கொள்முதல் நிலையத்தை எவ்வித அறிவிப்பும் இன்றி மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் தாங்கள் எடுத்து வந்த நெல் மூட்டைகளுடன் டிராக்டரில் விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை திடீரென நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் விரைந்து வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.

Related Stories: