புதுடெல்லி: தனது வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை தொடர்ந்து, இந்தியாவில் தாங்கள் செயல்படுவதை நிறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. ‘சர்வதேச மன்னிப்பு அமைப்பு’ இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு சட்ட விரோதமாக நிதி பெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இதன் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு கடந்த 10ம் தேதி முடக்கியது. இதனால், இந்தியாவில் செயல்படுவதை நிறுத்துவதாக இந்த அமைப்பு அதிரடியாக நேற்று அறிவித்தது.இது குறித்து, இந்த அமைப்பின் இந்திய இயக்குனர் அவினாஷ் குமார் கூறுகையில், ``மனித உரிமை அமைப்புகளை, குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்களை போல் அரசு நடத்துகிறது. ஆதாரமின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.