சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, விஜயகாந்த் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது.
அதைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன், மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர். அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28-ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய் தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில், செம்படம்பர் 28-ம் தேதி இன்று அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவகுழுவின் கண்காணிப்பில் உள்ளார். திருமதி. பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய் தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.