ஜெனீவா: ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதிநிதி பவன்பாதே, அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார். இந்தியாவில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெற வில்லை என்றும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மாற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் பாகிஸ்தானில் கொல்லப்படுவதை உலகம் அறியும் என்று பவன்பாதே குறிப்பிட்டார்.