மதுரா: அயோத்தியை போல் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் அவதரித்ததாக இந்துக்கள் நம்புகின்றர். இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த மாதம் அங்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். மேலும், இந்த இடத்தில் இருந்த பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதியை கட்டுவதற்காக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அயோத்தி அருகே 5 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு வழங்கியுள்ளது.இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில்தான் கிருஷ்ணர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. இதை அகற்றி விட்டு, இங்குள்ள 13.37 ஏக்கர் நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி மதுரா நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘