கிருஷ்ணகிரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏவின் உடல் நிலை குறித்து வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்எல்ஏவான அதிமுகவை சேர்ந்த சி.வி.ராஜேந்திரன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தகவல் வந்து கொண்டே இருந்தது. இதை பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.