மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை வழங்கியதும் திரையரங்குகள் திறப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

மதுரை:  மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின்  உரிய நேரத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.  மதுரையில் கொரோனோ பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், தனியார் தொண்டு மையம் சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் ‘அம்மா கிச்சன்’ செயல்படுகிறது. இதனை ஆய்வு செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கியுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படாத அளவில் போதுமான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின்னர், மருத்துவக்குழு அறிவுரையின்பேரில்  உரிய நேரத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். சினிமாத்துறையினர் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’’ என்றார்.

Related Stories: