சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23ம் தேதி ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல். தேசப்பன் ஆகிய 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச்சென்றனர். ஜூலை 28ம் தேதி வரை தொடர்பில் இருந்தனர். ஆகஸ்ட் 7ம் தேதி அவர்கள் கரைக்குத் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேதனைக்கு உள்ளாயினர். 53 நாட்கள் கழித்து செப்டம்பர் 13ம் தேதி அவர்கள் மியான்மர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தது.