செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இளம்பெண் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா என அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு முருகேசன் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (30). செங்கல்பட்டு மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்கிறார். இவருக்கும், அச்சிறுப்பாக்கத்தை ஹேமாவதி (26) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர், அடிக்கடி போதையில் ஹேமாவதியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் படுக்கைஅறையில் ஹேமாவதி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி செங்கல்பட்டு போலீசார் மற்றும் ஹேமாவதியின் பெற்றோருக்கும், ஜெகநாதன் தகவல் தெரிவித்தார். இதையறிந்ததும், ஹேமாவதியின் பெற்றோர் பதறியடித்து வந்து, மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.