புழல்: எண்ணூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு கொண்டு செல்வதற்காக கர்நாடகா மாநிலம் கணக்கு புறா என்ற இடத்திலிருந்து 100 டன் எடை கொண்ட கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை திருவள்ளூர் கூட்டு சாலையில் இருந்து பாடியநல்லூர் வழியாக வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் பாடியநல்லூர் பணிமனையில் இருந்து ஊத்துக்கோட்டை செல்வதற்காக மாநகர பேருந்து ஒன்று வெளியே வந்தது. இந்நிலையில், சிக்னல் அருகே வந்த அரசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. அப்போது, லாரியில் இருந்து கிரானைட் கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. இதனால், அவ்வழிேய மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த சரவணன் (44), அவரது மகன் ராம் (16) மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த ஆவடி சேக்காடு குளக்கரை தெருவை சேர்ந்த குப்புசாமி (34) ஆகிய மூவரும் இந்த கற்களில் இடறி சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.