போலீஸ் காவலில் இறந்த தொழிலாளி உடல் அடக்கம்

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 3 பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களில், சரண்யா (20) என்ற பெண்ணுடன் கடந்த மாதம் மணிகண்டன் வாக்குவாதம் செய்து வெந்நீர் ஊற்றினார். இதில், அந்த பெண் இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக, மணிகண்டனை 21ம் தேதியன்று ஊரக போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையின்போது, அவர் இறந்தார்.

அவரது சாவில் மர்மம் உள்ளது எனக்கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின், நேற்று முன்தினம் இரவு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள், மணிகண்டனின் உடலை வாங்கி பழவஞ்சிபாளையம் சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர்.

Related Stories: