திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 3 பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களில், சரண்யா (20) என்ற பெண்ணுடன் கடந்த மாதம் மணிகண்டன் வாக்குவாதம் செய்து வெந்நீர் ஊற்றினார். இதில், அந்த பெண் இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக, மணிகண்டனை 21ம் தேதியன்று ஊரக போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையின்போது, அவர் இறந்தார்.