கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பாடந்துரை கிராமம். இங்கு வசிப்பவர் சஜீவன். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மகள் சரண்யா (20). அரசுக்கல்லூரியில் இளநிலை பட்டம் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சரண்யா தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்தார். சரண்யா வழக்கம்போல் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.