திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 26வது வார்டுக்கு உட்பட்ட சக்திவேல் நகர், சாமி நகர், திருமலை நகர், சாஸ்திரி நகர் பிரதான சாலை போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் முறையாகவும், முழுமையாகவும் நடைபெறாததால், பல இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், சாஸ்திரி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் கடந்த சில நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியது.