ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றுள்ளன. இந்நிலையில், நகர் அருகே பாட்டமாலுவில் உள்ள பிர்தோசாபாத் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.